செட்டிநாடு மீன் குழம்பு :
தேவையான பொருட்கள் :
மீன் : அரை கிலோ
சின்ன வெங்காயம் : 1 கப்,
தக்காளி : 1 ,
பூண்டு : மூன்று பல்,
புளி : எலுமிச்சை அளவு,
மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்,
மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு
தாளிக்க :
வெந்தயம் : கால் ஸ்பூன்,சோம்பு : கால் ஸ்பூன்,கறிவேப்பிலை : தேவையான அளவு.நல்ல எண்ணெய் : தேவையான அளவு
(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் மீனை வேக விடவும். மீன் நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.
அவ்வளவுதாங்க! சூப்பர் மீன் குழம்பு ரெடி!
சில்லி கோபி
14 years ago
No comments:
Post a Comment